Saturday 27 September 2014

மூட்டுவலி மருத்துவம்

மூட்டுவலி மருத்துவத்தில் உள்மருந்தை தேர்வு செய்வது என்பது நோயாளியின் நாடி நடை, தேக வன்மை மற்றும் சரியான நோய்க்கனிப்பு போன்ற விஷயங்களை முறையாக கடைப்பிடித்தால் மட்டுமே முழுமையான தீர்வைக் கொடுக்க இயலும். ஆகவே வெளிப்பிரயோக மருந்துகளை மட்டுமே இங்கு குறிப்பிடுவது சரியாக இருக்கும். ஏனெனில் எனது அனுபவத்தில் நோயாளர்கள் வெளிப்பிரயோக மருந்தில்கூட முழுமையாக குணமடைந்ததும் உண்டு.
சரக்குகளும் செய்முறையும்:
        கொடிவேலி, ஆதண்டை, மாவிலிங்கம், பொற்கொன்றை, வேம்பு, காற்றொட்டி, புங்கம் வேர்ப்பட்டை இவை வகைக்கு 3 பலம்(105 கிராம்) இடித்து, தூணிப்பதக்கு(ஆறுமரக்கால்) தண்ணீர் விட்டு, ஜந்தில் இரண்டாகக் காய்ச்சி, வடிக்கட்டிக்கொண்டு, ஆமணக்கு எண்ணெய், வேப்ப செய்தது), அதிமதுரம், பெருங்குரும்பை, குளவிந்த மஞசள், திரிபலா, சாதிக்காய், வசம்பு, அரத்தை, துருக, ஓமம், வெள்ளைப் பூண்டு, சேராங்கொடடை, (சுத்தி செய்தது), பெருங்காயம், கார்போக அரிசி, வளிச்சப்பிசின், திப்பிலி, சுக்கு.
    இவை வகைக்கு ஒன்றரை பாகம் வராகனெடைத் (6.3 கிராம்) தூள் வீதம் போட்டு எரித்து, வடித்து, மூட்டுவலியுள்ள பகுதியில் நேய்த்து வர, எட்டு நாளில் வாதம் என்று சொல்லக்கூடிய எல்லா வியாதிகளும் தீரும். இது கைகண்டமுறை, அகஸ்தியராலும் சொல்லப்பட்டிருக்கிறது.
தெரிந்து கொள்வோம்:
1.    தொண்டை வலியை உடன் குணப்படுத்தாவிடில் மூட்டுவாதம் வர வாய்ப்புண்டு.
2.    மூட்டுவாத நோய் கண்டவர்களுக்கு இதய பாதிப்பு ஏற்படும்.
3.    கீல்வாத நோய் கண்டவர்கள் வலி இருந்தாலும் மூட்டுகளை அசைக்க வலியுறுத்த வேண்டும். இல்லையெனில் மூட்டுகள் செயலிழக்க வாய்ப்புண்டு.
4.    எலும்பு சிதைவு மூட்டு அழற்சி நோய் உள்ளவர்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டும்.

பந்துக் கிண்ண மூட்டுகள்:
    ஒர் எலும்பின் பந்து போன்ற உருண்டை முனை மற்றொன்றின் குழியில் பொருந்தி இருப்பது
(எ-டு): தோள், இடுப்பு, மூட்டுகள். இந்த இரு இடங்களில் உள்ள மூட்டுகளுக்கு பின்வரும் அசைவுகள் உள்ளன.
    வளைதல், அசைதல், உடலின் மையத்திலிருந்து புறம்பே போய் அசைதல், உடலின் மையத்தை நோக்கி வருதல், திரும்புதல் அல்லது வட்டமிடுதல், வட்டமாகச் சுழலுதல்.
கீழ் மூட்டு:
    இதனால் ஏற்படும் அசைவுகள் வளைத்தலும், நீளுதலும் மட்டுமே (எ-டு) மழங்கை, முழங்கால், விரல் மூட்டுகள்.
வழுக்கு மூட்டுகள்:
    ஒன்றன் மேல் ஒன்றுள்ள எலும்புகள் வழுக்கி வருதல், ஒரளவு தாரளமாக அசைவுகள் ஏற்படும். எ-டு: மணிக்கட்டு, கணுக்கால் மூட்டுகள்.
முளை மூட்டு:
    வட்டமிடுதல்(திரும்புதல்) என்பவை மட்டும் தான் இந்த மூட்டுகளில் (எ-டு) தலை திரும்பும் போது, அட்லஸ் எலும்பு, பிடர் அச்சின்மேல் சுழலுகிறது, கையைத் திரும்பம்போது, ஆர எலும்பு, முழங்கை எலும்பின்மேல் சுழலுகிறது.
மூட்டுவலியின் பிரிவுகளும், அறிகுறிகளும்:
    மூட்டு வாதம், கீழ் வாதம், அடிபடுதலால் ஏற்படும் மூட்டழற்சி, மூட்டில் தொற்று, மூட்டு எலும்புச் சிதைவு அழற்சி.
மூட்டு வாதம்:
    அறிகுறிகள்: பெரிய மூட்டுகளில் வீக்கம், வலியுடன் கூடிய காய்ச்சல்.
    வெளிப்பாடுகள்: மூட்டுகளில் வீக்கம் மாறி மாறி வரும். மூட்டுவலி கடுமையாக இருக்கும். மூட்டில் நீர்; கோர்த்து இருக்கும். மூச்சுத் திணறல் இருப்பதாக முறையிடக் கூடும். சமீபத்தில் தொண்டைவலி கண்டிருக்கலாம்.
கீழ் வாதம்:
    அறிகுறிகள்: கைகள், பாதங்களில் உள்ள சிறு மூட்டுகளில் வலி, வீக்கம்.
    வெளிப்பாடுகள்: காய்ச்சல் அதிகம் இருக்காது. காலையில் வலி கடுமையாக இருக்கும். சிறு மூட்டுகள் அதிக அளவிலும் பெரிய மூட்டுகள் சிறிய அளவிலும் பாதிப்படையும்.
அடிபடுவதால் ஏற்படும் மூட்டழற்சி:
    அறிகுறிகள்: கீழே விழுவதால் ஏற்படும் மூட்டுவலி, வீக்கம்.
    வெளிப்பாடுகள்: எலும்பு முறிவு, மற்ற காயங்கள் இருக்கலாம்.
மூட்டில் தொற்று:
    அறிகுறிகள்: காய்ச்சல், மூட்டுகளில் வீக்கம், மூட்டுகளில் வலி பாதிக்கப்பட்ட உறுப்பை அசைக்க மறுத்தல், அசைத்தால் வலி அதிகமாக இருக்கும்.

வெகு மூத்திரம், சர்க்கரை வியாதி, இந்திரிய இழப்பு, நீரிழிவு

மது மேக லேகியம்:
    சுத்தமான எள்ளுப் பிண்ணாக்கு, ஆவாரம் பட்டை வகைக்கு 30 கிராம், பருத்திப் பருப்பு 100 கிராம், வால்மிளகு, இலவங்கப்பட்டை 50 கிராம், மாச்சக்காய், சிறுநாகப்பூ 25 கிராம், பரங்கிப்பட்டை 50 கிராம், பசும்பால் 1 லிட்டர், நல்லெண்ணை 150 மி.லி பனைவெல்லம் 500 கிராம்.
செய்முறை: மேலே கூறப்பட்ட சரக்குகளைச் சூரணித்துக் கொண்டு பாலில் வெல்லத்தை தூளாக்கிப் போட்டு கரைத்துக் காய்ச்சி, கல், மண் இல்லாமல் வடிகட்டி, மீண்டும் அடுப்பேற்றி பாகுபதத்தில் காய்ச்சி முன் சூரணித்தை சிறிது சிறிதாகத் தூவிக் கிளறி, இறக்கி நல்லெண்ணை விட்டுப் பிசைந்து பத்திரப்படுத்தவும்.
அளவு: 10 கிராம், தினம் 2 வேளை, 40 நாட்கள்
துணை மருந்து: அப்பிரக செந்தூரம், தங்க செந்தூரம்.
தீரும் நோய்கள்: வெகு மூத்திரம், சர்க்கரை வியாதி, இந்திரிய இழப்பு, நீரிழிவு

கருப்பை நோய்கள்.ஒழுங்கற்று மாதவிடாய் வருதல்

சிறுநீரக, ஜனனேந்திரிய உறுப்புகளை ஊக்குவிக்கும், மூட்டுவாதம், கருப்பை நோய்கள், சிறுநீர் கழியும் போது வலி ஏற்படுதல் விந்து குறைவாக சுரத்தல் விந்துப்பையில் வலியுண்டாதல், , இடுப்பு, முதுகுவலி நீங்கும்.ஒழுங்கற்று மாதவிடாய் வருதல்

உபயோகம்:
    கருப்பை தசைகளை நன்கு போஷpத்து அதனை நன்கு இயங்க ஊக்குவிக்கிறது. மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. பசியைத் தூண்டி நன்கு ஜீரணமாவதற்கும் பயனுடையதாகிறது. பெரும்பாடு, இடைபூப்பு, சூதகதடை, சூதகவலி, வெள்ளைப்படுதல் மற்றும் மலட்டுத்தன்மையை நீக்கி மகப்பேறு அடைய செய்கிறது.
    ரஜப்பிரவர்த்தினி வடியுடன் எடுக்க சூதகத்; தடையையும், சூதக வலியையும் போக்குகிறது. இலகு சுப்பாரி பாக் மற்றும் பால் கல்யாண் கருத்துடன் எடுக்க பெண் மலட்டுத்தன்மையை போக்கி மகப்பேறு அடைய செய்கிறது.

மூட்டுவலி, உடல்வலி, எலும்பு வலி மற்றும் உடல் மசாஜ் மூலிகை தைலம்

மூலிகை உடல் மசாஜ் தைலம்:
    மூட்டுவலி, உடல்வலி, எலும்பு வலி மற்றும் உடல் மசாஜ் மூலிகை தைலம்
1.    மூட்டுவலி, இடுப்புவலி, எலும்புவலி போன்ற வலிகளுக்கு சிறிதளவு தைலத்தை எடுத்து நன்றாக தடவிய பின் அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் ஒத்தடம் கொடுக்க வலிகள் மாறும்.
2.    பெண்களுக்கு மார்பகம் வீங்கிய நிலையில் வலி இருக்கும் போது சிறிதளவு தைலத்தை எடுத்து நன்றாக இரு பகுதிகளிலும் மசாஜ் செய்து அரை மணிநேரம் கழித்து வெந்நீரில் ஒத்தடம் கொடுக்க வீக்கம் குறைந்துவிடும்.
3.    மார்பகம் வளர்ச்சியில்லாமல் இருந்தால் இருபக்கமும் சிறிதளவு  நன்றாக வட்டமாக சுழற்றியபடி மசாஜ் செய்தால் மார்பகம் பெரிதாகும். (குளிர்ந்த நீரில் கழுவவும்).
4.    ஆண்களுக்கு நரம்பு பாதிப்பு மூலம் ஆண்மை குறைவிற்கு சிறிது தைலம் கீழிலிருந்து மேலாக 10 நிமிடம் மெதுவாக மசாஜ் செய்து ஒருமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ நரம்புகள் பலமடையும்.
5.    மூட்டு வலிகளுக்கும் ஊனமுற்ற குழந்தைகளில் சூம்பிபோன கால்களுக்கும், கைகளுக்கும், தண்டுவடங்களுக்கும் காலையும் மாலையும் பத்துநிமிடம் மசாஜ் செய்ய நாளடைவில் கால்கள் பலமுள்ளதாக மாறும் குளிர்ந்த நீரில் கழுவவும்.

கருப்பையைத் தாக்கும் நோய்களுக்கான மருத்துவம்;

கருப்பையைத் தாக்கும் நோய்களுக்கான மருத்துவம்;
    பெண்குறி மற்றும் கருப்பையில் உண்டாகும் அரிப்பு, புண், கிர்த்தி இவைகளுக்கு கருடன் கிழங்குத் தைலம் மற்றும் கருடன் கிழங்குச் சூரணம் ஆகியவை சிறந்த  பயன்தரும் மருந்துகளாகும்
கருடன் கிழங்குத் தைலம் செய்முறை:
•    கருடன் கிழங்கு சூரணம்    100 கிராம்
•    கருஞ்சீரகம்            25 கிராம்
•    சுக்கு                25 கிராம்
•    வாய்விளங்கம்            25 கிராம்
•    மிளகு                25 கிராம்
•    கார்போக அரிசி            25 கிராம்
•    திப்பிலி                25 கிராம்
•    சிறிய வெங்காயம்        25 கிராம்
•    வாலுளுளை அரிசி        25 கிராம்
•    விளக்கெண்ணெய்        25 கிராம்
ஒன்று முதல் எட்டு வரை உள்ள சரக்குகளை சுத்தம் செய்து கல், மண் முதலியவைகளை நீக்கி, சூரணித்து வைத்துக் கொள்ளவும்.
சுpறிய வெங்காயத்தை அரைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும். பொடித்து வைத்துள்ள சூரணக் கலவையில் வெங்காயச் சாறு ஊற்றிக் கலந்து வைத்துக் கொள்ளவும். பிறகு, அடுப்பில் இரும்புக் கடாயில் விளக்கெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், பிசறி வைத்துள்ள கலவையைப் போட்டு சிறு தீயில் எரித்து, நீர்ப் பசையில்லாமல் காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
உட்கொள்ளும் அளவு:    1. தேக்கரண்டி அளவு, தினமும் 2 வேளைகள்.
புத்தியம்:    உணவில் உப்பு, புளி, காரம் குறைத்துக் கொள்ளவும்.
கருடன் கிழங்குச் சூரணம் செய்முறை:
•    கருடன் கிழங்கு வற்றல்    100 கிராம்
•    வாலுளுவை அரிசி    25 கிராம்
•    சுக்கு            25 கிராம்
•    கருஞ்சீரகம்        25 கிராம்
•    மிளகு            25 கிராம்
•    வாய்விளங்கம்        25 கிராம்
•    திப்பிலி            25 கிராம்
இவற்றை சுத்தம்செய்து நன்றாகக் காயவைத்து இடித்துத் தூள் செய்து கொள்ளவும்.
உட்கொள்ளும் அளவு: கால் முதல் அரை தேக்கரண்டி வரை.